இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது இந்தியில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைதான் அலியாபட்.
இவர் இந்தியில் நடித்த ஹைவே, ஸ்டூடண்ட் ஆப் தி இயர் ஆகிய படங்களின் ஹிட்டுக்குப்பிறகு பாலிவுட்டில் அலியாவுக்கு மவுசு கூடிவிட்டது. அதனால் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், அவரை தமிழுக்கு கொண்டு வர பல முயற்சிகள் நடந்தன. முதலில் கத்தி படத்துக்கு பேசினர். ஆனால் அவர் உடன்வில்லை. அதையடுத்து அஜீத்தின் புதிய படத்துக்கும் கெளதம்மேனன் பேசினார். அப்போதும் அவர் செவி சாய்க்கவில்லை.
ஆனால், இப்படி விஜய் அஜீத் படங்களுக்கே அவர் டேக்கா கொடுத்தபோதும், தனுஷ் மட்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்துக்கு எப்படியாவது அலியாபட்டிடம் கால்சீட் வாங்கி விட வேண்டும் என்று காத்திருக்கிறார்.
ராஞ்ஜனா படத்தில் தனுஷ் நடித்தபோது, அப்படத்தைப்பார்த்து விட்டு அவருக்கு வாழ்த்து சொன்ன சில பாலிவுட் நடிகைகளில் அலியாபட்டும் ஒருவராம். அந்த நட்புக்கு பிறகுதான் அவர் தனது வார்த்தையை நிராகரிக்க மாட்டார் என்று நம்பிக்கொண்டிருக்கிறராம் தனுஷ்.
0 comments:
Post a Comment