தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா, அதையடுத்து ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக ஓ.கே செய்து நடித்து வந்தார்.
ஆனால், பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடியில் அறிமுகமான உதயநிதிக்கு ஜோடியாக நடித்த பிறகு, மேல்தட்டில் இருந்து கீழ்தட்டுக்கு தாவிய ஹன்சிகா, அதன்பிறகு சூர்யா, சித்தார்த், ஆர்யா, கார்த்திக் என்று நடித்தவர், மான்கராத்தேயில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார்.
அதையடுத்து, உயிரே உயிரே என்ற படத்தில் அறிமுகமாகும் ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுடன் நடித்துள்ளார். இதையடுத்து கோடம்பாக்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு ஹன்சிகாவை கட்டிப்பிடித்து டூயட் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட, ஆளாலுக்கு அவரிடம் கால்சீட் கேட்டு முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர்.
இதனால் தற்போது மீகாமன், ரோமியோ ஜூலியட் படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு, அடுத்து தன்னை மூன்றாம்தட்டு ஹீரோயினியாக்கி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால், உயிரே உயிரே படத்தில் நடிப்பதற்கு காரணம், நான் சிறுவயதில் இருந்தே ஜெயப்பிரதாவின் ரசிகை. அதனால் அவர் சித்துவுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. அதனால்தான் அப்படத்தில் நடித்தேன்.
மற்றபடி தொடர்ச்சியாக புதுமுகங்கள், வளர்ந்துவரும் ஹீரோக்களுடன் நடிக்கும் எண்ணம் இல்லை என்று விடாப்பிடியாக மறுத்து வரும் ஹன்சிகா, மீண்டும் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு முதலிடம் கொடுக்கப்போகிறேன் என்று வெளிப்படையாக கூறி வருகிறார்.
இதனால், சிவகார்த்திகேயன்,சித்துவுக்கு அடித்த அதிர்ஷ்டம் நமக்கு அடிக்கவில்லையே என்று கோலிவுட்டில் வளர்ந்து வரும் சில இளவட்ட நடிகர்கள் பீல் பண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment