சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் சினிமாவுக்கு அறிமுகமான அனுஷ்கா, அதற்கடுத்த ஆண்டே ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால் அப்படத்தின் தோல்வியால் அடுத்து கோடம்பாக்கம் அவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. அதனால் மறுபடியும் தெலுங்குகிற்கு சென்று அழுத்தமாக கால்பதித்து நம்பர்ஒன் நடிகையாகி விட்டார். அந்த வகையில், கடந்த 8 ஆண்டுகளில் 25 தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, தமிழில் 8 படங்களில் நடித்துள்ளார். ஆனால், மற்ற நடிகைகளை போன்று மலையாளம், கன்னடம, இந்தி என்ற வேறு எந்த மொழிப்படங்களிலும அவர் நடித்ததில்லை.
இந்நிலையில், தற்போது முதன்முறையாக ஒரு கன்னட படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கர்நாடகத்தில் உள்ள மங்களூர்தான் அனுஷ்காவுக்கு சொந்த ஊர் என்றாலும், கன்னட சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்க அவர் பலமுறை முயற்சிகள் எடுத்தபோதும் கைகூடவில்லையாம். அதனால் கன்னட படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று கூறிவந்த அனுஷ்காவுக்கு இப்போதுதான் கன்னட நடிகர் தர்ஷன் நடிக்கும் ஜக்குதாதா என்ற படம் மூலம் அந்த ஆசை நிறைவேறியுள்ளதாம்.
அதனால், தான் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் பிசியாக இருந்தபோதும், 5 நாள் 10 நாள் என்று கால்சீட் கொடுத்து நடித்து தருவதாக அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம் அனுஷ்கா.
0 comments:
Post a Comment